முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

புதன், 19 செப்டம்பர், 2012


அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

 
திருமூலர் திருமந்திரம் 270/3047

அன்பு தான் சிவம் என்பது எளிதில் புலப்படுவதன்று. அதை தீர ஆராய்ந்து அறிந்தால் தான் புலப்படும்.

சிறுவயதிலிருந்தே இறைவன் மேல் அன்பு செலுத்தி வந்திருந்தேன். அவன் பாடல்களையும் அவன் நாமத்தை சொல்லியும் அவன் பால் கொண்டிருந்த அன்பு பெருகிக் கொண்டே சென்றது. மடை திறந்த காட்டாற்று வெள்ளம் அடித்து புரண்டு வரும் என்பார்களே.. அதைப்போல் அந்த அன்பும் பெருகி வருவதை உணர்ந்து என் உள்ளமும் உடலும் நடுநடுங்கியது. அந்த வெள்ளத்தில் நீந்தி இது எங்கு சென்று முடிகிறது என்று பார்ப்போம் என்று தொடர்ந்து நீந்தி சென்றதில், அது முடியும் இடத்தில் இறைவன் எனக்கு காட்சி கொடுத்தான். அவனைக் கண்டவுடன் பல புதிர்களுக்கு விடை கிடைத்தது போல் இருந்தது. இதைத்தான் ஞானம் என்றும் கூறுகிறார்கள் என்று அறியாலனேன். இதை வெறுமனே படித்து அறிவதை விட்டு, தலையில் ஏற்றி, விடாது முயற்சி செய்து இறைவனைக் காணுங்கள். அதை அனுபவியுங்கள்.

ஓம் நமசிவாய