முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

உங்கள் சமய நூல்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா ?

திருச்சிற்றம்பலம்.

உங்கள் சமய நூல்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா ?

சைவ சமய நூல்கள் தொகுப்பு.


எந்த ஒரு கிறிஸ்தவனைக் கேட்டால், பைபிள் தான் எங்கள் நூல், புனிதமான நூல் என்பான். ஒரு முசுலீமைக் கேட்டால் குரான் என்பான். நம் நூல்கள் எவை என்று தெரியாமலேயே கண்ட கண்ட புத்தகங்களை படித்து நான் அந்த மதத்திற்கு மாறிவிட்டேன் என்று ஊடகங்களில் பெருமை பேசிக்கொள்ளும் சிறுமையர்களை நாம் இன்றைய தினங்களில் பார்த்து வருகிறோம். அவர்கள் நூல்களில் இல்லாத கொடூரங்கள் இல்லை. நிறைய நேரங்களில் இந்த நூல்கள் எல்லாம் தீவிரவாதிகளுக்கான பயிற்சி நூல்கள் போல் இருக்கின்றன. சமுதாயங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை உடையவனாக இருக்கின்றன. பழங்கால மனிதர்களால் எழுதப்பட்ட  இந்த புத்தகங்கள் பல முறைகள் மனிதர்களால் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதப்பட்டன. உதாரணத்திற்கு பழைய ஏற்பாட்டில் தேவையில்லாத கசடுகள் இருப்பதை நீக்கி புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. இந்த புத்தகங்கள் யாவும் பெரும் பகுதி அந்தந்த காலத்திற்கு மட்டுமே உகந்ததாக இருக்கிறது. ஒரு சில அமெரிக்கர்கள் பைபிளில் இருக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசு கொலை, நரபலி போன்ற அனைத்தையும் தொகுத்தே வெளியிட்டுள்ளனர். http://www.evilbible.com இந்த தொகுப்பை கொண்டுள்ளது. இதனாலேயே இவர்கள் எத்தனை கொலை செய்தாவது தம் மதத்தை பரப்ப வேண்டும் என்ற எண்ணங்கொண்டு, அவர் நேசிக்கிறார் போன்ற பொய் வாசகங்களைக் கூறியும் பிற சமயங்களின் கடவுளர்களை சாத்தான் என்று கூறியும், கடந்த 17 நூற்றாண்டுகளாக உலகில் போராடி வருகிறார்கள். உலக வரலாற்றிலேயே அதிக உயிர்களை ஒரு காரணத்திற்காக கொன்றது எந்த காரணத்திற்கு என்றால் இவர்களின் மதத்தை உலகில் பரப்புவதற்காகத்தான். இத்தனை "பெருமை"யுடைய மதத்தை வைத்துக் கொண்டு நம் ஊர் தெருக்களில் புதியதாக மதம்மாறியவர்கள் எத்தனை ஒலி பெருக்கிகள் வைத்துக் கொண்டு எத்தனை ஆட்டம் போடுகிறார்கள் ? நிற்க.


நம் சமயத்தைப் பற்றிய அடிப்படை அறிவு/கல்வி இல்லாமையினாலேயே நமக்கு இந்த இழி நிலை. அதனால் தான் உரக்க கூறுகிறேன், கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன். சமயகல்வி இல்லாதவன் உயிர் இல்லாதவன். நம் சமயங்களின் நூல்கள் எவை என்று நாம் அறிந்து கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக படித்து ஞானத்தைப் பெறுவது நாம் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களில் ஒன்று. நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப் பட்டவை. இவை எவற்றிலும் கீழ்த்தரமான வார்த்தைகள் ஒன்று கூட கிடையாது. யாரையும் அழிக்கச் சொல்லும் தீமையான வார்த்தைகளோ, வாக்கியங்களோ ஒன்று கூட கிடையாது. இவை எக்காலத்தையும் சாராமல், காலத்தை வென்றவை. அதாவது எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மையை கொண்டவை. இனி வரும் ஆயிரமாயிரம் காலத்திற்கும் இது பொருந்தும். இது போன்று எந்த சமயங்களிலும் கிடையாது. இது இறைவனின் திருவருள் ஒன்றினாலேயே கூடும். அப்படிப்பட்ட பெருமையுடைய, என்றைக்கும் பொருந்தக்கூடிய, இதுவரை ஒரு சிறு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே இன்றைக்கும் பொருந்துவதாக அமைந்த நூல்கள் அத்தனையும் படிக்க நாம் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் ? அந்த நூல்கள் எவை என்று அறிந்து கொண்டு அவற்றை படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.



அநாதியானதும், அநாதியான முதல் நூல்களை உடையதும் எனக்

 

 கொள்ளப்படும் சைவ சமயத்தின் பிரமாண நூல்கள்



திருநெறி

  • வேதம் 4 – அருநெறிய மறை: உலகிற்கு வேண்டிய பொது அறம் சொல்வது
  • சிவ ஆகமம் 28 – பெருநெறி: சத்திநிபாதத்திற்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது

திருமுறை சார்ந்த நூல்கள்

பன்னிரு திருமுறை 12 - தோத்திரம்
திருக்கடைக்காப்பு (திருமுறை 1,2,3 திருஞானசம்பந்தர்)
  • தேவாரம் (திருமுறை 4,5,6, திருநாவுக்கரசர்)
  • திருப்பாட்டு (திருமுறை 7, சுந்தரர்)
  • திருவாசகம், திருக்கோவையார் (திருமுறை 8, மாணிக்கவாசகர்)
  • திருவிசைப்பா, திருப்பல்லாண்டு (திருமுறை 9, 9 ஆசிரியர்கள்)
  • திருமந்திரம் (திருமுறை10, திருமூலர்) பிரபந்தம் (திருமுறை 11, 12 ஆசிரியர்கள்)
  • பெரியபுராணம் (திருமுறை 12, சேக்கிழார்)
  • திருத்தொண்டர் புராணசாரம்
  • திருப்பதிக்கோவை
  • திருப்பதிகக்கோவை
  • திருமுறை கண்டபுராணம்
  • சேக்கிழார் புராணம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை

சைவ சமய சாத்திர நூல்கள்

  1. திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
  2. திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
  3. சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்
  4. சிவஞான சித்தியார் - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
  5. இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்
  6. உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
  7. சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்
  8. திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்
  9. வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்
  10. போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்
  11. உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
  12. கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்
  13. நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
  14. சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்

புராண நூல்கள்

  • திருவிளையாடற் புராணம்
  • மதுரைக் கலம்பகம்
  • மதுரைக் கோவை
  • மதுரை மாலை
  • காஞ்சிப் புராணம்
  • கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
  • கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
  • சிதம்பர மும்மணிக் கோவை
  • திருவாரூர் நான்மணி மாலை
  • சிதம்பர செய்யுட் கோவை
  • காசிக் கலம்பகம்
  • திருக்குற்றாலக் குறவஞ்சி
  • பிரபந்தத்திரட்டு
  • இரட்டைமணி மாலை
  • கந்த புராணம்
  • பிற நூல்கள்
  • சித்தாந்த சாத்திரம்
  • சொக்கநாத வெண்பா
  • சொக்கநாத கலித்துறை
  • சிவபோக சாரம்
  • முத்தி நிச்சயம்
  • சோடசகலாப் பிராத சட்கம்
  • திருப்புகழ்
  • முத்துத்தாண்டவர் பாடல்கள்
  • நீலகண்டசிவன் பாடல்கள்
  • நடராசபத்து

வீரசைவ நூல்கள்

  • சித்தாந்த சிகாமணி
  • பிரபுலிங்க லீலை
  • ஏசு மத நிராகரணம்
  • இட்டலிங்க அபிடேகமாலை
  • கைத்தல மாலை
  • குறுங்கழி நெடில்
  • நெடுங்கழி நெடில்
  • நிரஞ்சன மாலை
  • பழமலை அந்தாதி
  • பிக்ஷாடன நவமணி மாலை
  • சிவநாம மகிமை
  • வேதாந்த சூடாமணி
  • திருத்தொண்டர்மாலை
  • ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்

ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பட்டினத்தார், தாயுமானார், சிவப்பிரகாசர், குமரகுருபரர், சைவத் திருமடத்து தலைவர்கள், அருளாளர்கள், ஔவையார், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், கிருஷ்ணபாரதி, சுத்தானந்த பாரதி, 18 சித்தர்கள் ஆகியோரது நூல்கள்

இன்னும் எண்ணற்ற நூல்களும் உள.

இணைத்துள்ள படங்களை B4 தாளில் அச்சிட்டு உங்கள் கோவில்களில் ஒட்டி வையுங்கள். இதுவும் ஒரு சிவதொண்டே. நமசிவாய.

அச்சிட ஏதுவான கருப்பு வெள்ளைப்படம்.


வண்ணப்படம்.





சனி, 16 ஏப்ரல், 2016

சமய கல்வியின் இன்றியமையாமை



சமய கல்வியின் இன்றியமையாமை



கல்வியின் பெருமை

சமயகல்வியின் பெருமை

அன்றைய சமயகல்வி

இன்றைய சமயகல்வி

நாளைய சமயகல்விக்கு இன்றைய விதை


தூங்கியது போதும் சைவர்களே, இந்துக்களே. எழுமின், பணியாற்றுமின் !!!





    கல்வியின் பெருமை


இன்று, ஒரு வானஊர்தியை எடுத்துக் கொண்டு உலகை சுற்றி வந்தால்....

மலேசியாவில் பத்துகுகை முருகன் கோவில் உள்ளது. சிங்கப்பூரில் கல்லாங் சிவன் கோவில் உள்ளது. பிரான்ஸில் சிவன் கோவில்கள் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது, அமெரிக்காவில் இருக்கிறது, இங்கிலாந்தில் இருக்கிறது, உலகம் முழுவதும் நம் சைவ கோவில்கள் இருக்கின்றன இன்று. கோவில்கள் இல்லாத நாடே இல்லை எனலாம் என்னும் அளவிற்கு நம் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியமாயிற்று ? இவற்றில் பெரும்பான்மையான கோவில்கள்  இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்டது.  இவ்வுலகில் முதன்முதலில் இறைவனைப் பற்றிய சிந்தனை செய்து, அவனருளாளே அவனைத் துதித்து, அவனை அறிந்து, இந்த உலகம் முழுவதும் மக்களுக்கு அறிய வைத்தது சைவ சமயமே. சைவ சமயம் பன்நெடுங்காலம் உலகம் முழுவதும் இருந்தது. இதற்கு சான்றுகளே இன்று பல்வேறு நாடுகளின் பூமிக்கடியில் இருந்து சிவலிங்கமும் சிவன் கோவிலும் வெளிவருவதே நம் கண் முன்னர் நிற்கும் வாழும் சான்றுகள். பின்னர் பல அரசியல் காரணமாக சில பகுதிகளில் வெவ்வேறு மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால், கடந்த சில நூறாண்டுகளில், மீண்டும் சைவ கோவில்கள் உலகெங்கும் புதுமையாக நிறுவப்பட்டு வருவதையே நாம் பார்க்கிறோம்.
இலங்கையில் இனப்பிரச்சனை காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் இது சாத்தியமாயிற்று.

இலங்கைத் தமிழர்கள் நம் சைவ சமயத்தில் மிகவும் பிடிப்பாக அழுத்தமாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் 7 அரை கோடி தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம் ? சமயக்கல்வி ஒன்றே பெரும் வித்தியாசம். இந்த சமயக்கல்வியே இலங்கைத் தமிழர்களை நம் சமயமும் மொழியும் கலாசாரமும் உலகெங்கும் பரவ உதவி செய்தது என்றால் அது மிகையில்லை. இலங்கையில் பௌத்த அரசு இருப்பினும் தமிழர்களுக்கு தமிழ் சமய பாடங்களே நடத்தப்படுகிறது. தமிழ்ப் பாடசாலைகளில் சைவப்பாடம் கற்பிக்கப்படுகிறது. சமயகல்வி பெற்ற எவரையும் மதம் மாற்ற இயலாது. நம் சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்தவர் எவரும் மதம் மாற மாட்டார்கள்.

கல்வியின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துவதை பாருங்கள்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்


                     அதிகாரம்: கல்வி, குறள் 393.

கல்வி கற்காதவர் கண்ணில்லாத குருடர் என்றே சாடுகிறார் வள்ளுவர். கல்வி ஒருவருக்கு அவ்வளவு அவசியமானது. அந்த கல்வியின் அவசியத்தை நீங்கள் உணர வேண்டுமாயின், ஒரு நாள் இந்த பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் கண்களை நல்ல துணியைக் கொண்டு இறுக கட்டிக் கொண்டு ஒரே ஒரு நாள் முழுவதும் வாழ்ந்து பாருங்கள். நிஜமாகவே முயற்சி செய்து பாருங்கள். அப்போது தான் உங்கள் கண்களின் அருமை உங்களுக்குத் தெரியும். கல்வி இல்லாதவனுடைய வாழ்வும் குருடனின் வாழ்கை போலவே இருக்கும்.

சமயக்கல்வியின் பெருமை

அப்போ சமயக்கல்வி ? நம் ஆன்மா கடைத்தேற, இறைவன் திருவருள் பெற, இப்பிறப்பில் இன்பமும், மறுபிறப்பு இல்லாமல் இறைவன் திருவடி இன்பம் அனுபவிக்கவும் கண்போல நமக்கு வழிகாட்டுவது சமயக்கல்வியே. எப்பிறப்பிறப்பிற்கும் நமக்கு எப்போதும் இன்பம் தருவிக்கும் வழியையும், பிறப்பு சுழலில் இருந்து விடுபட்டு பூரண இன்மான இறைவன் திருவடி நீழலை எய்தவும் வழிகாட்டுவது சமயகல்வியே.

கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன்.
சமயகல்வி இல்லாதவன் உயிரே இல்லாதவன்.

சமயகல்வி இல்லாதவன் தன் பிறப்பின் உண்மையையும் நோக்கத்தையும் அறியாதவனாகிறான்.

இன்றைய நிலை


சென்னையில் 50 லட்சம் பேர். சென்னையில் இந்த வேளச்சேரியில் மட்டும் எத்தனை பேர் உள்ளனர் ? எத்தனை பேர் பக்தர்கள் ? எத்தனை பேர் கோவிலுக்கு வருபவர்கள் ? எத்தனை பேருக்கு சமயகல்வி உள்ளது ? ஒரு நூறு பேரிடம் சென்று, “ஏனப்பா திருநீறு பூசிகிறாய்” என்று கேட்டால் பலர் தெரியாது என்பார்கள், மற்றவர்கள் ஆளுக்கொரு பதிலை கொடுப்பார்கள். எவ்வளவு இழிவான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வே எடுத்துக்காட்டும். இது மிகவும் வேதனையான விடயம். சமயக்கல்வி இல்லாமையே இந்த இழிவான நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். இன்று சமயக்கல்வி எங்கே கிடைக்கிறது ? சமயக்கல்வி முழுவதுமாக திட்டமிட்டு ஒழிக்கப்பட்டு விட்டது. ஆங்காங்கே நம் பெற்றோர்கள் நமக்கு சொல்லிக்கொடுக்கும் செய்திகளும் விடயங்களும் மட்டுமே நம் பக்குவப்படுத்தி வளப்படுத்துவதாக அமைகிறது. அந்த சிறு விடயமே இன்று நம் சமயத்தைக் கட்டிக் காத்து வருகிறது. அடிப்படை சமய அறிவு இல்லாதவர்களே இன்று மதம் மாறி வருகிறார்கள்.


நேற்றைய நிலை



பாடசாலைகளில் சமயக்கல்வி கொடுக்கப்பட்டது. சமயமும் படிப்பும் ஒன்றாக பிணைந்திருந்தது. சைவம் என்பது ஒரு பாடமாகவே பாடசாலைகளில் இருந்தது. சைவத்தை பற்றி அடிப்படை தெரியாமல் ஒரு மாணவர் கூட வெளியில் வருவது இல்லை. ஞாயிற்றுக்கிழமை தோறும் சமய வகுப்பு கட்டாயமாக அனைவருக்கும் நடத்தப்பட்டது. மேலும் பஞ்ச புராண பாடல்கள் தினமும் கடவுள் வாழ்த்தாக பாடப்பட்ட பின்பு தான் வகுப்புகள் துவங்கும். பஞ்ச புராணம் தெரியாமல் மாணவர்கள் பாடசாலையை விட்டே வெளியே வரமாட்டார்கள். அது மட்டுமல்லாது, பாடசாலையின் வளாகத்தின் உள்ளேயே ஒரு பிள்ளையார் கோவிலோ, சிவன் கோவிலோ இருக்கும். அங்கு வெள்ளிக்கிழமை தோறும் காலையில் சுவாமிக்கு அபிடேகம் நடக்கும். பின்னர் ஒரு 15 நிமிடம் சமயச் சொற்பொழிவு நடக்கும். நம் சமய செய்திகள் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படும். பின்னர் சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கும். இது அனைத்து பாடசாலைகளிலும் கட்டாயமாகஇருந்தது. இவ்வாறு வலுவாக நம் சமய கல்வி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.


நாளைய சமயகல்விக்கு இன்றைய விதை


1. பெற்றோர்களே இன்று மிகப்பெரிய பங்களிப்பு செய்யும் நிலையில் உள்ளார்கள். பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு போதிய அடிப்படை சமயகல்வி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். வாரம் ஒரு முறையேயாயினும் குழந்தைகள் கண்டிப்பாக கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். தல வரலாறுகளை அறிவித்து பல்வேறு பாடல் பெற்ற தலங்களுக்கும் சிறப்பான தலங்களுக்கும் தொடர்ந்து அழைத்துச் செல்லப்பட வேண்டும். சமயகல்வி வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

2. கோவில்கள், ஆதீனங்கள் போதிய சமயகல்விக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். இலவசமாக வகுப்புகள் நடத்துவதற்கு இடமளித்தும், இலவசமாக நூல்கள் வழங்கியும் பங்களிக்கலாம்.

3. ஒவ்வொரு ஞாயிறும் கட்டாயமாக சமய வகுப்புகள் ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு தெருவில் உள்ள ஏதாவது ஒரு வீட்டிலும் நடைபெற வேண்டும்.

4. பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். குருபூஜை, குடமுழுக்கு, ஆண்டு விழாக்கள், சமய கருத்தரங்குகள், பிரதோஷம், வார வழிபாடுகள், வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும்.

5. நமக்கு தெரிந்த விடயத்தை நாலு பேருக்கு சொல்ல வேண்டும். அனைத்து ஊடகங்களிலும் சைவ செய்திகள் பகிர வேண்டும். எங்கும் எதிலும் சிவபெருமானின் புகழ் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

6. பள்ளி கல்லூரிகளில் சமய பாடங்கள் கொண்டு வர வேண்டும். இதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.


திருச்சிற்றம்பலம்.


சிவமீனா
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.

சிவனை அடைய வழி யாது ? செயற்கரிய செயல் செய்யும் தலைவன் யார் ? சமய கல்வி ?

whatsapp வாட்ஸேப்பில் பதிவு செய்யக்கூடிய சைவ சிவ பதிவுகள்.

திருச்சிற்றம்பலம்.

செயற்கரிய செயல் செய்யும் தலைவன் யார் ?


பல பெரும் தொழில்களுக்கு அதிபராக இருந்து பல்வேறு நாடுகளுக்கு பறந்து கொண்டே இருக்கும் ஒருவர் தன்னுடைய தொழிலில் ஒரு கீழ்மட்ட தொண்டனின் சாதாரண ஓடுகள் வேய்ந்த வீட்டிற்கு வருவாரா ?  அந்த கீழ்மட்ட தொண்டனின் வீட்டில் ஒரே சமயத்தில் 10 பேருக்கு மேல் அமர முடியாது. அப்படி ஒரு அதிபர் தன் தொண்டனின் வீட்டிற்கு வந்தால் எப்படி இருக்கும் ?  மிகவும் பகட்டான ஆடையுடன், 100 பேர் புடை சூழ 100 கார்கள் அணிவகுக்கவா வருவார் ?  தொண்டனுக்கு இணையாக, அவன் தோளோடு தோள் சேருமாறு, தன் மேலான தகுதியை விட்டு மிகவும் கீழ் இறங்கி, சாதாரண உடையில், வெறும் 3,4 பேர் கூட வர, அந்த தொண்டருக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டல்லவா வருவார் ?  இப்படி ஒரு காட்சியை, இன்றைய நாளில் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஆனால், இதை செய்து கொண்டே இருக்கிறார் ஒருவர்.
அவர் தாம் நம் தலைவர் பரசிவனார்.  தன்னுடைய நிகரற்ற தன்மையை மறைத்துக் கொண்டு, அற்பமான மனிதர்களின் தகுதிக்கு ஏற்ப தன்னை தாழ்த்திக் கொண்டு அந்த உயிர்களுக்கு நிகராக வந்து அமர்ந்து அருள் புரிகிறார். யார் செய்வார் இந்த செயலை ? எவர் துணிவார், இது போன்ற செயலைச் செய்ய ? மலமிலாத, மலமறுக்கும் பித்தன் மட்டுமே இதைச் செய்வான். அப்படிப்பட்ட உயர்ந்த சிவத்தை நாம் எப்படித் துதித்து வழிபடுவது ? செய்வது ஒன்றும் அறியாமல் விழிக்கின்றோமே ?  நமசிவாய.

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.
                   - திருமூலர்.

தாள் - திருவடி.
தண்ணின்ற தாள் - குளிர்ச்சி பொருந்திய இணையில்லாத திருவடி.
களிம்பு - தேவையற்ற பொருள். உயிர்களிடம் பொருந்தியுள்ள மலம்.
ஆகாயத்தைவிட பெருமைமிக்க சிவபெருமான், தன் நிலையையைத் தாழ்த்திக் கொண்டு, உயிர்களின் தன்மைக்கு பொருந்தும் திருமேனி தரித்து தன் குளிர்ச்சி பொருந்திய இணையில்லா திருவடியை மலப் பிணி அண்டாது காவலாக வைத்து, நம் மனதிற்குள் நின்று நம்மை உருக்கி பேரானந்தத்தை நல்கி, நம்மோடு பொருந்தியிருக்கும் மலத்தை தன் பார்வையாலே அறுத்து நீக்கி அருள் புரிகிறாரே.
இந்த செயலை இவரை விட வேறு எவர் செய்ய முடியும். அத்தகைய பெருமானை, நாம் எப்போதும் ஏத்துவோம். நமசிவாய.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

சிவனை அடைய வழி யாது ?

ஒற்றை ஊசியின் மேல் நின்று கொண்டு நான் பல ஆண்டுகள் தவம் செய்ய வேண்டுமா ? இல்லறத்தை துறந்து காட்டிற்குள் சென்று கரையான் புற்று மறைக்க அவனை வேண்டி நிற்க வேண்டுமா ? அவனைத் தேடித் தேடி உடல் நோக காடு மலை கடக்க வேண்டுமா ?  பெரிய விளக்கிலே திரியாக நம் உடலை இட்டு எரிக்க வேண்டுமா ?  எத்தனை பெருமையுடைய பரம்பொருளை எத்தனை தியாகம் செய்து அடைய முடியும் என்றாலும் அது தகும். ஆனால், அந்த பரம்பொருளோ, அனைவராலும் கொடுக்கக்கூடிய சாதாரண பொருளைக் கொடுத்தாலே நம் அன்பு வலையுள் அகப்பட்டு நமக்கு அருள் புரிந்து விடும் தன்மையைக் கொண்டுள்ளதே. இந்தக் கருணையை என்னவென்று சொல்வது ? அந்த பரம்பொருளுக்கு நாம் என்ன கொடுக்க முடியும் ? நம்மிடம் நம் பொருள் என்று என்ன இருக்கிறது ? பூவும் நீரும் கொடுத்தாலே அந்த பரம்பொருளை நம் வசப்படுத்தி விடலாம். இந்த சிறு ரகசியம் கூட தெரியாமல் எத்தனை பாவிகள் ஈசனைப் பெறாமல் பிறப்புச்சுழியில் விழுந்து தவிக்கிறார்கள் ?

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே
       -- திருமூலர்

பொழிப்புரை :

`சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவ்விடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.
திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.
அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

கோடை விடுமுறை வைதீக சைவ பாடம்


தற்போது உள்ள கல்வி முறையில் அடிப்படையில் போதிய சமய கல்வி நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வில்லை. சொல்லப்போனால், நம் சமயம் சார்ந்த அத்தனை செய்திகளையும் வரலாறுகளையும் திராவிட அரசுகள் மாறி மாறி கொஞ்சம் கொஞ்சமாக பாடத்திட்டங்களில் இருந்து அழித்து விட்டன. தமிழ் இலக்கியங்கள் என்றாலே, அதன் இதயத்தில் சைவ இலக்கியங்களே உள்ளன. ஆனால், தமிழ் இலக்கியங்கள் என்று இன்று ஏதேதோ புத்தகங்களை படிக்கிறார்கள். வெளிநாட்டவர் கைக்கூலிகளால் திட்டமிடப்பட்டு இந்து சமயம் முற்றிலுமாக நம் கல்வி முறையிலிருந்து வேரறுக்கப் பட்டிருக்கிறது. இதனாலேயே நாம் ஒவ்வொருவரும் நம் தலையில் வைத்துப் போற்றக்கூடிய நூல்களை நாமே கேலி செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். இவ்வளவு இழிவான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை அறிவதே ஒரு சில விழுக்காடுகள் தாம். இது மிகவும் வேதைனைக்குரியது. இந்த நிலையை பயன்படுத்தியே ஒரு கொள்கையும் உண்மையும் இல்லாத மாற்று சமயத்தார் தம் நூல்களை நம்மிடம் நம் ஆட்களை வைத்தே புகுத்தி வருகிறார்கள். இந்த நிலை மாற, நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகளுக்கு அடிப்படை சமயக் கல்வி கிடைத்திடுமாறு செய்திடல் வேண்டும். உங்கள் ஊரில், தெருவில் உள்ள கோவில்களை மையமாக வைத்து சில பெற்றோர்கள் சேர்ந்து சமய கல்வி வகுப்புகள் ஆரம்பியுங்கள். அனைத்து குழந்தைகளுக்கும் நம் சமய அடிப்படை செய்திகள், சமய கொள்கைகள், நம் இறைவனார் யார், நம் குருமார்கள் யார், நம் சமய நூல்கள் எவை, நம் சமய சின்னங்கள் எவை, நம் சமயம் வளர்க்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அனைத்து அடிப்படை தகவல்களையும் நம் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போய்ச் சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமையாகும். வயிறை வளர்க்கும் செயல்களை மட்டும் செய்யாமல், நம் ஞானத்தையும் சமயத்தையும் வளர்க்கும் செயல்களையும் ஒவ்வொருவரும் செய்யுங்கள். செயல் படுங்கள். செயல் படுத்துங்கள். எப்போதும் எம்பெருமானார் கூடவே துணையிருப்பார். நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.

திருமுறை இறைவனின் வடிவம்.

இறைவன் மந்திர வடிவமாக உள்ளான். திருமுறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில்

மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார்
  
என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார்.
  
திருக்கோவில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசனத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான்.
   
நியாசம் = வைப்பு,
பிரதிட்டை = நிலை பெறுத்துவித்தல்.
    
திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மைகளை,
    
சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே

    
என்று ஒரு பழம்பாடல் எடுத்தியம்புகின்றது. ஆகவே, மந்திரமாகிய திருமுறைகளை தினமும் ஓதுவோம். நன்மையே என்றும் நம்மைச் சேரும்.

திருச்சிற்றம்பலம்.

திருச்சிற்றம்பலம்.
 

இந்த வலைப்பூவின் குறிக்கோள்.

இந்து சமயம் என்பது சைவ, வைணவ சமயங்களைக் குறிக்கிறது. சைவ சமயமே அநாதியானது. தொன்று தொட்டு வருவது. வைணவம் பின்னாளில் தோன்றியது. ஆகவே சைவ சமயமே சமயம் என்பர் பெரியோர். அத்தகைய நம் சமயத்தில் ஞானம் வற்றாத ஊற்றாக பொதிந்து கிடக்கிறது. இன்றைய நடைமுறையில் பள்ளியில் சேர்ந்து படித்து வேலை பெற்று வாழ்கை நடத்தி வருபவர்களுக்கு இத்தகைய ஞானம் ஒன்று இருப்பதைப் பற்றியே தெரியாமல் இருக்கிறது. இதற்கு நம் கல்வி முறையில் இருந்து நம் சமய செய்திகளை திராவிட அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு விலக்கி அழித்ததே காரணம். நம் சமயங்களின் அடிப்படை தத்துவங்கள், கொள்கைகள், நூல்கள், குருமார்கள், நமது வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அடையாளம் காட்டுவதே இந்த குழுவின் தலையாய குறிக்கோள்.

இறைவன் ஒருவரே, அந்த இறைவனுடைய எண் குணங்கள் எவை, இந்த உயிர்கள் எவை, அதன் தன்மை எவை, சைவ சித்தாந்த தத்துவங்கள் யாது உரைக்கின்றன,  என்பவை நம் சமயத்தின் அடிப்படை தத்துவங்களை விளக்குகின்றன. வேதங்கள், சிவாகமங்கள், பன்னிரு திருமுறை, 14 சாத்திரங்கள், இன்னும் பல சைவ நூல்கள் நமக்கு இறைவனை அடைய வழிகாட்டுகின்றன. சைவ சமயத்தை மீட்டெடுத்த நால்வரும், 63 நாயன்மார்களும் நமக்கு குருவாக இறைவனை அடைய வழிகாட்டுகிறார்கள் என்பதை பல பதிவுகளில் நாம் முன்னர் பார்த்தோம். திருமுறைகளில் பல்வேறு பதிகங்களும் பொருளும் பகிரப்பட்டன. இன்னும் அறிய வேண்டியவை எண்ணற்றன.
நாம் அனைவரும் தொடர்ந்து நம் வேலைகளை பார்த்துக்கொண்டே, புதுப்புது திருமுறை பாடல்களை படித்தும், அதன் பொருள் அறிந்தும், சைவ சித்தாந்தம் படித்தும், கோவில் தல வரலாறுகள் அறிந்து அக் கோவில்களுக்கு சென்றும், நம்மால் இயன்ற சிவப்பணிகளை செய்தும், நம் குருமார்களின் வரலாறு அறிந்தும், அவர்கள் செய்த செயற்கரிய செயல்களை அறிந்தும், புராண வரலாறு அறிந்தும் வருவோம். நாம் படித்ததை, அறிந்ததை இங்கு நாம் யாவர்க்கும் பகிர்வோம். தொடர்ந்து இணைந்திருந்து சிவஞானத்தை பகிருங்கள்.
நம் பன்னிரு திருமுறைகள் பற்றி அறியாதவர்கள் யாரும் இவ்வுலகில் இருக்கக்கூடாது. தொடர்வோம் நம் பயணத்தை.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நமசிவாய.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது யாது ? jesus loves you... யாரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை

whatsapp shiva siva shaiva articles வாட்ஸேப் வாட்சப் சிவ சைவ செய்திகள்
     
திருச்சிற்றம்பலம்.
     

சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது யாது ?

 

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.
         
2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.
           
3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
            
4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.
          
5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.
            
6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.
       
7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.
      
8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.
   
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
   
திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.
    
திருச்சிற்றம்பலம்.
        

அளவிடமுடியாத பெருஞ்சுடர்.

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு ? இதை நாம் தூரத்தை அளவிடும் அளவு கோலால் அளந்து விட முடியும். இத்தனை தூரத்தை நாம் ஒரு கிலோமீட்டர் என்று நாமே வைத்துக் கொண்டு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இத்தனை கிலோமீட்டர்கள் என்று அளவிட்டு கூற முடியும். வெப்பத்தை அளவிட முடியும். இந்த மூட்டை எத்தனை கிலோ என்று அளவிட முடியும். இந்த பாக்டீரியா எத்தனை பெரியது என்று அளவிட முடியும். இவ்வாறு நாம் பார்த்து உணரும் பொருட்களை அளவிட நாமே ஒவ்வொரு அளவு கோலை வரையறுத்துள்ளோம்.
ஆனால், நாம் வரையறுத்துள்ள அத்தனை அளவு கோல்கள் எதிலுமே அகப்படாத பொருள் ஒன்று உள்ளதே. அதன் நீளத்தை அளந்தால் முடியவில்லை. அகலத்தை அளந்தால் முடியவில்லை. இவ்வாறு நாம் அறிந்த அளவுகோல்கள் எதை வைத்துமே நம்மால் அளவிடமுடியாத பொருளாக இது உள்ளது. உண்மையில் கூறப் போனால், இதை அளவிடும் அளவுகோல் நம்மிடம் இல்லை. எந்த அளவு கோலை வைத்து அளவிடுவது என்றே நமக்குத் தெரியவில்லை. தெரியாத ஒன்றை நாம் அளவிட முடியாது. இவ்வாறாக நம்மால் அளவிடமுடியாத பொருளாக அந்த பரம்பொருளே இருக்கிறது. இதையே சைவ சித்தாந்தம், சிற்றறிவை வைத்து பேரறிவை அளவிட முடியாது என்கிறது. அந்த முற்றறிவை நம்மால் அறிய முடியாது. அதை வணங்கி ஏத்தி நிற்பதே நாம் செய்ய தகுந்த செயல்.

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
                        - திருமந்திரம்

பொழிப்புரை:

எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணர வல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.

திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

திருச்சிற்றம்பலம்.

நான் சிவத்தை அணுகுகின்றேனா ?

 

இறைவனைப் பற்றி அறியாதிருந்த காலத்தே, நாம் எங்கோ காடு மேடு புதர்கள் என்று அலைந்து திரிந்து சுற்றினோம். ஆனால், இறைவனைப் பற்றி அறிய ஆரம்பித்து அவனை வழிபட ஆரம்பித்த பின்னர், அந்த சிவத்திற்கும் நமக்கும் உள்ள இடைவெளி குறைந்து வருகிறதா ? அந்த சிவத்தை நாம் நெருங்குகிறோமா ? இதை அறிய முடியுமா ? இதற்கு அளவுகோல் உள்ளதா ?
இருக்கிறது. இறைவனை அறிந்த பின்னர், நீங்கள் அவன் மீது அன்பு செலுத்துவீர்கள். அவனை உள்ளம் என்ற கோவிலில் வைத்து பூஜிப்பீர்கள். ஆராதனை செய்வீர்கள். அதே அன்பானது அவனை அண்டி வாழும் அனைத்து உயிர்களின் மீதும் உங்களுக்கு அதே அன்பு ஏற்படும். அந்த உயிர்கள் மீதும் உங்களுக்கு அன்பு ஏற்பட்டால், புலால் உண்ணுபவராக இருந்தால் நீங்கள் அதை நிறுத்தி விடுவீர்கள். பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தை தனக்கு வரும் துன்பமாக பாவனை செய்வீர்கள். நடக்கும் போது கூட எறும்புகளைக் கொன்று விடுவோமோ என்று கவனமாக நடப்பீர்கள். எந்த ஒரு உயிரையும் கொல்ல மாட்டீர்கள். முல்லைக் கொடி படர கொம்பு இல்லாமல் தவித்த தவிப்பை நீங்கள் உணர்வீர்கள். கன்றை இழந்த தாய்ப்பசுவின் வேதனையை உணர்ந்து துடித்த மனுநீதிச் சோழனின் மன வேதனையை நீங்களும் உணர்வீர்கள். இறைவனின் கண்களில் இருந்து ரத்தம் வழிந்த காட்சியைப் பார்த்துத் துடித்த திண்ணனாரின் மனநிலையை நீங்களும் உணர்ந்து துடிப்பீர்கள்.
இந்த மாற்றங்கள் உங்களுக்குள்ளும் நிகழ்ந்தால், நீங்கள் சிவத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஈசனவர் எவ்வுயிர்க்கும் இயல்பானன் சாழலோ.
திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

jesus loves you

 

சென்ற ஞாயிறு காலை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு காற்றழுத்தம் சரி பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது, என் நெற்றி நிறைய திருநீறு இருப்பதைப் பார்த்தவுடன் ஒரு புன்னகையோடு பெரும் ஊக்கத்துடன் ஒரு பெண்மணி என்னை நோக்கி ஓடோடி வந்து ஒரு துண்டு சீட்டை நீட்டினாள். என்னைப் பார்த்து இயேசு உங்களை நேசிக்கிறார் என்று கூறி என் பதிலுக்காக என் முகத்தை நோக்கினாள்.

நான் பதிலுக்கு புன்முறுவலிட்டுக் கொண்டே இந்த 5 கேள்விகளைக் கேட்டேன்.

1. உலகிலேயே எந்த ஒரு காரணத்திற்காக அதிகப்படியான மனிதர்களையும், கால்நடை உயிரினங்களையும் கொன்று குவித்துள்ளார்கள் என்று தெரியுமா ? இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவ மதத்தை உலகெங்கும் பரப்புவதற்கு. இங்கு நேசம் எங்கிருந்து வந்தது ?

2. ஐரோப்பா கண்டத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஆசியாவைத் தவிர கிறிஸ்தவ மதத்தை எல்லோரும் கைவிட்டு தூக்கியெறிந்து வருகிறார்கள் தெரியுமா ? அமெரிக்காவில் மட்டும் கடந்த 2007-2014 ஏழாண்டுகளில் கிறிஸ்தவத்தை தூக்கியெறிந்தவர்கள் மட்டும் 50 இலட்சம் பேர் தெரியுமா (New York Times) ?

(http://www.nytimes.com/2015/05/12/upshot/big-drop-in-share-of-americans-calling-themselves-christian.html?_r=0
)
உலகம் முழுவதும் அழிந்து வரும் கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்ற, அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, இந்தியாவை குறிவைத்து தெருவுக்கு தெரு கடை போட்டிருப்பது தெரியுமா ?

3. வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் கூறும் எந்த பெயரும் இந்த உலகில் இல்லை என்று தெரியுமா ? அப்போது மக்கள் ஆனந்தமாக வாழ்ந்து வந்தது தெரியுமா ?
   
4.இயேசு சிலுவையில் அறையப்பட்டு சாவதற்க்கு முன்னர் என்ன கூறினார் தெரியுமா ?

Matthew 27:45  மேத்யு அதிகாரம் 27:45

     The Death of Jesus

     45 From noon until three in the afternoon darkness came over all the land. 46 About three in the afternoon Jesus cried out in a loud voice, “Eli, Eli,[a] lema sabachthani?” (which means “My God, my God, why have you forsaken me?”).[b]
 Eli Eli lema sabachthani - இறைவா இறைவா என்னை இப்படி கைவிட்டுவிட்டாயே ?

என்று கதறினார். இறைவனால் கைவிடப்பட்டவர் இயேசு. அப்படி கைவிடப்பட்டவரை இறைவனின் மகன் என்று எண்ணி ஒரு மதத்தையே உருவாக்கியுள்ளனர் வெளிநாட்டினர். இயேசு இறைவனின் மகனா ? பைபிளில் எழுதப்பட்டது யாவும் உண்மையா ? பைபிளில் எத்தனை கேவலமான வசனங்கள் இருப்பது தெரியுமா ? நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப்பெற்று காலத்தை வென்றவை தெரியுமா ?

5. நம் பரம்பு நாட்டை ஆண்ட பாரி மன்னன், மலைவளம் காணச் சென்ற போது, முல்லைக் கொடி ஒன்று படருவதற்கு கம்பு இல்லாமல் காற்றில் இங்கும் அங்கும் தவிப்பதைப் பார்த்த அந்த மன்னனின் கண்களில் கண்ணீர் பெருகி, தன் தேரை அங்கேயே அந்த முல்லைக் கொடிக்கு விட்டுவிட்டு நடந்தே அரண்மனை போனது தெரியுமா ? எல்லா உயிர்களிடத்தும் நாம் மிக்க அன்பு வைத்திருந்தது தெரியுமா ? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடியது தெரியுமா ? அன்பைப் பற்றி யார், யாருக்கு உபதேசம் செய்வது ?
இந்த நான்கு கேள்விகள் மட்டும் அவளைக் கேட்டுவிட்டு அவள் கொடுத்த துண்டுச்சீட்டை கிழித்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் பின்னாலிருந்து அவளுடன் கூட வந்தவர்கள் அவளை அழைக்க, அவள் வேறு ஏதும் என்னிடம் பேசாமல் சென்று விட்டாள்.
           
joshua project என்ற திட்டத்தை அமெரிக்க வாழ் கிறிஸ்தவர்கள் உருவாக்கி அதற்கு கோடி கோடியாக பணத்தை கொட்டி ஆசியாவிலிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இயேசு அழைக்கிறார் என்று கூறுமாறு ஏவிவிட்டிருக்கிறார்கள். நான் சிங்கப்பூரில் வாழும் காலத்தும் என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. நான் அமெரிக்காவில் வாழும் போதும், என் வீட்டு கதவுகள் தட்டப்பட்டன. நான் லண்டனில் வாழ்ந்த போதும் என் வீட்டு கதவுகள் தட்டப்பட்டன. நம் எல்லோர் வீட்டுக்கதவும் ஒரு நாள் தட்டப்படும். அப்போது நாம் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

Following statement of the scholar Sir John Marshall acknowledges the view:
        Among the many revelations that Mohenjadaro and Harappa have in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and that it takes place on the most ancient living faith in the world.
   Another Western scholar G.U. Pope in his work Thiruvasagam writes as follows:
   Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times.
   Of the four Dravidian languages spoken now, Tamil is the oldest and richest language. The term Dravidian can, therefore, without any hesitation, be taken to mean Tamilnadu of South India.