whatsapp வாட்ஸேப் வாட்ஸேப்பில் பதிவு செய்யப்பட்ட குறுஞ் செய்திகள்
கோவில்
சுவருக்கோ, கோவிலுக்கோ தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் கடுமையாக
கண்டிக்கிறார் திருமூலர். என்னதான் ஒரு மனிதன் தானே பெரும்பொருள் செலவு
செய்து கட்டிய கோயிலாக
இருந்தாலும் சரி, அவன் அந்தக் கோயிலில் இருந்து ஒரு சின்னஞ் சிறிய
செங்கல்லைக்கூட தன் உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால், அவன்
கதையை முடித்து விடுவான் ஆண்டவன். (மென்மையாகப் பார்த்தோம் நாம். ஆனால்,
திருமூலர் தன் பாடலில் கடுமையாகச் சொல்கிறார்.) அந்த மனிதன் அவ்வாறு
கோயில் சொத்தைத் தன் உபயோகத்திற்காக எடுத்தபோது, அதைத் தடுக்காத அரசனுக்கு
(ஆட்சியாளருக்கும்) பெரும் தீங்கு வரும். தவறான அந்தச் செயலைச் செய்பவர்,
யாராக இருந்தாலும் சரி, அவர் கதையை ஆண்டவன் முடித்து விடுவான்.
‘அதெல்லாம் என்னிடம் நடக்காது. நான் முனிவன். நான் வேதியன். ஆகையால் கோயில் சொத்தை, என் குடும்பச் செலவிற்காக எடுத்தால் கடவுள் என்னைத் தண்டிக்க மாட்டான்’ என்று யாராவது சொன்னால், அது எடுபடாது. கோயில் சொத்தினைச் சூறையாடுபவர்களின் வாழ்வை, ஆண்டவன் சூறையாடி விடுவான். யாராக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டான். இவையெல்லாம் நம் கருத்து அல்ல! திருமூலர் சொல்கிறார்.
கட்டுவித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும்; அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும்; முனிவேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே!
பொழிப்புரை:
திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக் குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக் குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.
சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக.
திருச்சிற்றம்பலம்.
------------------
திருச்சிற்றம்பலம்.
கோவில் சுவருக்கோ, கோவிலுக்கோ தீங்கு விளைவித்தால் ?‘அதெல்லாம் என்னிடம் நடக்காது. நான் முனிவன். நான் வேதியன். ஆகையால் கோயில் சொத்தை, என் குடும்பச் செலவிற்காக எடுத்தால் கடவுள் என்னைத் தண்டிக்க மாட்டான்’ என்று யாராவது சொன்னால், அது எடுபடாது. கோயில் சொத்தினைச் சூறையாடுபவர்களின் வாழ்வை, ஆண்டவன் சூறையாடி விடுவான். யாராக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டான். இவையெல்லாம் நம் கருத்து அல்ல! திருமூலர் சொல்கிறார்.
கட்டுவித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும்; அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும்; முனிவேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே!
பொழிப்புரை:
திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக் குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக் குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.
சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக.
தெய்வ வெண்திருநீறு சிறக்கவே.
திருச்சிற்றம்பலம்.
------------------
இராஜராஜ சோழனின் ஆணவம் -
திருச்சிற்றம்பலம்.
இராஜராஜ சோழனின் ஆணவம் திருமூலர் திருக்கோயில் குற்றம் என்ற தலைப்பில், ஐந்து பாடல்களில் திருக்கோயிலில் நிகழக்கூடாதவற்றைப் பட்டியல் இடுகிறார். திருக்கோயில்கள் பொது சொத்து. அவற்றில், எந்த ஒரு மனிதரும் உரிமை கொண்டாட முடியாது. அங்கே, எந்த அதிகாரமும் செல்லுபடியாகாது; செல்லுபடியாகக்கூடாது. தனி மனிதர் ஒருவர், கோடிக்கணக்காகச் செலவு செய்து, கோயில் கட்டியதாக வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் அந்தக் கோயிலில் எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பார்க்கக்கூடாது. ‘நான்தான் இந்தக் கோயிலைக் கட்டினேன்’ என்ற எண்ணம் கூட அவருக்கு வரக்கூடாது. எங்கே இது நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில்தான், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் வாழ்வில் நடந்ததாக ஒரு கதையைச் சொல்லி வைத்தார்கள் நமது முன்னோர்கள். பலவிதமான படிப்பினைகளைச் சொல்லும் கதை அது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் உருவாகிக் கொண்டிருந்த நேரம் அது. ‘‘யாரிடமிருந்தும் எந்த உதவியையும் கோயிலுக்காகப் பெறக்கூடாது’’ என்று ராஜராஜசோழன் உத்தரவிட்டு விட்டார். கோயில் மும்முரமாக உருவாகிக் கொண்டிருந்தது. அதாவது, மனம்-மொழி-மெய் என்ற மூன்றும் கோயிலை உருவாக்குவதிலேயே உரமாகச் செயல்பட்டது என்பது பொருள். அந்த நேரத்தில், கிழவி ஒருத்தி, அங்கே வேலை செய்து கொண்டிருந்த சிற்பிகள் மற்றைய பணியாளர்கள் என அனைவருக்கும் நீர்மோரும் குளிர்ந்த நீரும் கொடுத்து வந்தாள். அவ்வாறு தினந்தோறும் செய்து வந்த அவளது தொண்டினால், கோயில் பணியாளர்கள் அனைவரும் களைப்பு நீங்கி, சுறுசுறுப்பாகக் கோயிலை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். கோயில் வேலைகள் நிறைவடையும் நேரம் வந்தது. அவ்வளவு நாட்களாக நீர்மோரும் குளிர்நீரும் தந்து தங்களை உபசரித்த கிழவியிடம் தலைமை சிற்பி, ‘‘பாட்டி! நீ எங்களுக்குப் பெரும் உதவி செய்திருக்கிறாய். உனக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? கேள்!’’ என்றார். அதற்குக் கிழவி, ‘‘கோயிலெல்லாம் கட்டற சிற்பி நீங்க. உங்க கிட்ட என்னத்தக் கேக்கப்போறேன். முடிஞ்சா, அதோ! அங்க இருக்கிற அந்தப் பெரிய்ய கல்லை, சாமி தலைக்கி மேலே வையி!’’ என்றாள். ஒருசில விநாடிகள் யோசித்த தலைமை சிற்பி, அப்படியே செய்தார். ஆம்! கோயில் கருவறையில் இருக்கும் சுவாமிக்கு மேலே, உச்சியில் கிழவி தந்த கல்லை வைத்து மூடினார். கோயில் வேலைகளை முடித்து, கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தார்கள். ஒரு பெரும் கோயிலை, அற்புதமான முறையில் நிர்மாணம் செய்த ராஜராஜசோழன், பெருமிதமான ஆணவத்தோடு படுத்தார். அவர் கனவில் சிவபெருமான் காட்சி அளித்து, ‘‘ஏதோ கிழவி தந்த நிழலில் இருக்கிறேன்’’ என்று கூறி மறைந்தார். சிவபாதசேகரன் எனப் பெயர் பெற்ற ராஜராஜசோழன் திடுக்கிட்டு எழுந்தார். உடனே தலைமை சிற்பியை அழைத்து, தான் கண்ட கனவைச் சொல்லி விசாரித்தார். சிற்பியும், கிழவி நீர்மோர் தந்ததையும் அவள் வேண்டுகோளையும் சொல்லி நடந்ததை விவரித்தார். ராஜராஜசோழனின் ஆணவம் நீங்கியது. ‘சிவபெருமானின் பாதங்களைத் தன் தலையில் சூடியிருப்பவன்’ என்று பொருள்படும்படியான சிவபாத சேகரன் எனும் பெயர் பெற்ற ராஜராஜசோழனுக்கே அப்படி என்றால், கோயிலுக்கு ஏதோ ஒரு ‘ட்யூப் லைட்டை’ வாங்கிக் கொடுத்துவிட்டு, தண்டோரா போடுவது நியாயமா? இதைவிடக் கடுமையான முறையில் திருமூலர் கண்டிக்கிறார்; கடுமையாக எச்சரிக்கவும் செய்கிறார். ஒரு திருக்கோயிலில் உள்ள இறை வடிவத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு போய், வேறொரு திருக்கோயிலில் நிறுவக்கூடாது. அதை மீறிச் செய்தால், அந்தச் செயல் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே, நாட்டை ஆளும் அரசனது ஆட்சி கலையும். அந்தச் செயலைச் செய்தவன், இறப்பதற்கு முன்பாகவே (அதாவது, இப்பிறவியிலேயே) தொழுநோயால் பீடிக்கப்பட்டு, துன்புற்று இறப்பான் என்கிறார் திருமூலர். தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலைகெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர்நந்தி கட்டுரைத்தானே! ஆகம சாஸ்திரங்கள் சொல்லும் இத்தகவலைச் சொன்ன திருமூலர், இதைத் தனக்குச் சொன்னது நந்தி பகவான் என்று கூறி இப்பாடலை முடிக்கிறார். ஆகம சாஸ்திரங்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். உலகியல் ரீதியாகப் பார்த்தாலும் இப்பாடலின் கருத்து நம்மை மிரட்டுவதாகவே உள்ளது. ‘‘பிள்ளையார் சிலையைத் திருடிக் கொண்டு வந்துதான் வைக்க வேண்டும். அதுதான் ஐதீகம்’’ என்று சொல்வது, ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கிறது. இது அண்டப் புளுகு, இப்படி எந்த ஐதீகமும் கிடையாது. ஆகம சாஸ்திரங்களிலும் இப்படி கிடையாது.
திருச்சிற்றம்பலம்.
--------------------------------------------------
திருச்சிற்றம்பலம்.
அகத்தியர் தேவாரத் திரட்டு. தேவாரம் தெரியும். அதென்ன அகத்தியர் தேவாரத் திரட்டு ? தேவரா பாடல்கள் பாடப்பெற்ற காலம் 7 ஆம் 8 ஆம் நூற்றாண்டு. ஆனால் அகத்தியர் வாழ்ந்த காலமோ அதற்கு வெகு முந்தையது. பின் எப்படி அகத்தியர் தேவார திரட்டு ? இந்த கேள்வி உங்களுக்கு எழ வேண்டும். அப்போது தான் நீங்கள் வரலாற்று காலத்தை சரியாக புரிந்துள்ளீர்கள் என்று அர்த்தம். தேவாரம் 1,00,3000 திருப்பதிகங்களைக் கொண்டவை. அதில் வெறும் 797 தான் நமக்கு கிடைத்தவை. மற்றவை மறைந்து போயின. எஞ்சியவை திருவாரூர் அரசன் அபயகுலசேகரன் என்ற இராஜ ராஜ சோழனின் வேண்டுகோளின் படி நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாக தொகுத்தார். இப்பாடல்களின் தொகுதி "அடங்கன் முறை" என்று அழைக்கப்படுகிறது. சிவாலய முனிவர் என்பவர் தினமும் தேவார பாடல்களை பாராயணம் செய்யும் பயிற்சியை மேற்கொண்டார். பல காலம் பயிற்சி செய்தும் பாராயணம் செய்ய முடியாமையால், சிதம்பரம் நடராச பெருமான் முன் சென்று தன் இயலாமையை சொல்லி வேதனைப்பட்டார். அப்போது நடராச பெருமான் பொதிகை சென்று அகத்தியரைக் கண்டால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அசரீரியால் உணர்த்தினார். பொதிகை மலை சென்றடைந்த சிவாலய முனிவர் 3 ஆண்டுகள் அகத்தியரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். உரிய காலத்தில் அவருக்கு காட்சி கொடுத்த அகத்தியர் அவர் தினமும் பாராயணம் செய்வதற்கு ஏதுவாக தேவாரப் பதிகங்களிலிருந்து 25 பதிகங்களை தேர்ந்தெடுத்து 263 பாடல்களை தொகுத்தருளினார். அகத்திய முனிவர் தேவாரத்திலிருந்து திரட்டி தொகுத்து வழங்கியதால், அதற்கு அகத்தியர் தேவாரத் திரட்டு என்ற பெயர் வந்தது. அகத்தியர் தேவாரத் திரட்டினை சொல்வோர்க்குத் தீவினை இல்லாத தேனான வாழ்வும் நிறைவில் இறைவன் திருவடி நிழலும் கிட்டும் என்பதும் திண்ணம். இந்த முறை அகத்தியருக்கு எப்படி கிடைத்தது ? ஒரு முறை அகத்தியர் ஈசனிடம், கலியுகத்தில் மனிதன் தன் அன்றாட தேவைகளான பொருள் ஈட்டுதல், உணவு தேடுதல், குடும்பத்தை பேணுதல் போன்றவற்றை பூர்த்தி செய்யவே பெரும் பகுதி நேரத்தை செலவிடுகிறான். தன் உண்மையான கடமையான இறை வழிபாட்டை மறந்து அலைகிறான். பன்னிரு திருமுறை பாக்களை தினமும் ஓதி வந்தாலே, கலியுக மனிதன் முழு வேதம் ஓதிய பலனை அடைய வழி காட்டும் என்று வழி வகுத்துள்ளீர்கள். ஆனால், இன்றைய மனிதனோ, பன்னிரு திருமுறைகளையும் கூட ஓத முடியாத நிலையில் உள்ளான். ஆகவே, தாங்கள் பெருங் கருணை கொண்டு இந்த நியதிக்கு சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அதற்கு எம்பெருமான் சில குறிப்பிட்ட பாக்களை மட்டும் ஓதினாலே, யுக தர்ம நியதியால், அவனுக்கு முழுப் பாடல்களை ஓதிய பலனை கிடைக்க யாம் வழி செய்வோம் என்று கருணை கொண்டு அருளினார். இந்த தொகுப்பே, அகத்தியர் தேவார திரட்டு ஆகும். இத்திரட்டு ஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் 7 பதிகங்களை அடக்கியதாகும். திருஞானசம்பந்தர் திருப்பிரம்மபுரம் திருநீற்றுப்பதிகம் பஞ்சாக்கர திருப்பதிகம் நமசிவாய திருப்பதிகம் திருஷேத்திர கோவை திருவெழுக்கூற்றிருக்கை திருக்கடவூர் மயானம் திருவாழ்கொளிபுத்தூர் திருப்பூந்திராய் கோளறு பதிகம் திருநாவுக்கரசர் திருவதிகை வீரட்டானம் நமசிவாய திருப்பதிகம் திருஷேத்திர கோவை கோயிற்றிரு விருத்தம் திருப்பூவணம் திருவதிகை வீரட்டானம் திருக்கயிலாயம் திருவாரூர் திருவிருத்தம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவெண்ணைநல்லூர் திருப்பாண்டிகொடுமுடி ஊர்த்தொகை திருக்கடவூர் மயானம் திருப்புன்கூர் திருக்கழுக்குன்றம் திருத்தொண்டத்தொகை திருமுறை ஓதுவோம். திருவருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்.
----------------------------------
திருச்சிற்றம்பலம்.
மனித பிறவி எதற்காக ? இந்த உடலை மையமாக வைத்துத்தான் இந்த உலகமே இயங்குகிறது. இந்த உடலை சுகமாக வைக்கத் தேவையான பொருளை நோக்கித்தான் நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த உடல் நமக்கு எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது ? இந்த உடலில் ஒட்டியிருக்கும் ஓர் அற்புதக் கருவி நம் மனம். இந்த உடலும் மனமும் ஒட்டியிருக்கும் நம் ஆன்மா மிகவும் அற்புதமானது. இந்த பிறவியில் நாம் செய்ய வேண்டியது என்ன ? பல ஆண்டுகள் உழைத்து செல்வம் சேர்க்கிறான் ஒருவன். ஆனால், அவையாவும் ஓர் நாள் தீயினாலோ, தண்ணீரினாலோ காணாமல் போகிறது. 2 ஆம் நூற்றாண்டில் ஒருவன் சேர்த்து வைத்த செல்வம் எங்கே ? 12 ஆம் நூற்றாண்டில் ஒருவம் சேர்த்து வைத்த செல்வம் எங்கே ? இன்று நாம் சேர்த்து வைக்கும் செல்வம் இன்னும் 100, 300 ஆண்டுகளில் எப்படி இருக்கும் ? இந்த நிலையில்லாமையையே நம் முன்னோர்கள் அழகாக பல சமயங்களில் எடுத்துக்காட்டியுள்ளனர். அப்படியானால் நிலையானது எது ? நாம் பெறும் அறிவும், ஞானமும், புண்ணிய பாவமே, நம் கூடவே நிழல் போல் பல பிறவிகளுக்கு தொடர்ந்து வரும். அப்படியானால், இந்த உடலை ஓர் கருவியாக பயன்படுத்தி நாம் அறிவு, ஞானம், புண்ணியம் ஆகியவற்றை இந்த பிறவியில் ஈட்டிக்கொள்ள வேண்டும். நம் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ள செய்து, இறைவனோடு கலக்கச் செய்ய வேண்டும். இதற்கு வழிகாட்டுவதே, நம் பன்னிரு திருமுறைகளும், சாத்திர நூல்களும். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். என்பது வள்ளுவர் வாக்கு. கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது. திருச்சிற்றம்பலம்.
-------------------------
திருச்சிற்றம்பலம். கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா ? கொங்கணவர் என்ற மகரிஷி தவத்தில் சிறந்து விளங்கி பல வலிமைகளை பெற்றவர். ஓர் நாள் ஆற்றில் குளித்து நீராடிவிட்டு வரும் போது, காட்டில் கொக்கு ஒன்று அவர் மேல் எச்சமிட்டது. அதைக் கண்டு கோபமடைந்த கொங்கணவர், அந்த கொக்கைக் கோபத்தோடு பார்த்தார். அது எரிந்து சாம்பலானது. மீண்டும் ஆற்றங்கரைக்கு சென்று தன்னை தூய்மை படுத்திக் கொண்டு ஊருக்குள் சென்று அருகிலிருக்கும் வீட்டில் யாசகம் கேட்டார். அந்த அம்மையாரோ, சற்றே பொறுங்கள், என் கணவர் உணவு உட்கொண்டிருக்கிறார். சற்று நேரத்தில் வருகிறேன். என்றார். சில காலம் கழித்து தாமதமாக வந்த அம்மையாரை நோக்கி கொங்கணவர் மிகவும் கோபத்தோடு பார்த்தார். ஆனால், அவர் கோபம் அந்த அம்மையாரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, அந்த அம்மையார் சிறிதே புன்முறுவலிட்டு, "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா ?" என்றார். கொங்கணவருக்கு மிகவும் ஆச்சரியம். காட்டில் தான் கொக்கை எரித்தது இந்த அம்மையாருக்கு எப்படி தெரியும் ? தான் தான் கொங்கணவர் என்ற தன் பெயரும் இந்த அம்மையாருக்கு எப்படி தெரியும் ? என்ற வியப்பில், தான் தவத்தால் பெற்ற வலிமையை விட இந்த அம்மையாருக்கு அதிக வலிமை எப்படி வந்தது என்று யோசித்துக் கொண்டே, அந்த அம்மையாரிடம் ஞான உபதேசம் கேட்டார். அதற்கு அந்த அம்மையாரோ, இந்த தெருவில் கோடியில் கறி வெட்டும் கடைக்காரனிடம் கேள் என்று கூறினார். இந்த பதில் ஆச்சரியத்தை தந்தாலும், அந்த அம்மையார் தனக்கு எது வேண்டும் என்பதை புரிந்து கொண்டு சொன்னதால், அந்த கடைக்காரரை அணுகினார். கடைக்காரரோ, இவரைக் கண்டவுடன், ஞான உபதேசம் வேண்டுமா ? என்றார். அதைக் கேட்டவுடன், கொங்கணவருக்கு இன்னும் வியப்பு அதிகமானது. கடைக்காரரோ, தன் கடையை மூடிக்கொண்டிருந்தார். உபதேசம் வேண்டுமாயின் தன்னோடு வரும்படி கேட்டுக் கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரிலிருக்கும் தன் வீட்டிற்கு சென்றார். கொங்கணவரை அறையில் காத்திருக்கும் படி கூறிவிட்டு உள்ளே சென்று, தன்னை தூய்மை படுத்திக்கொண்டு, முதலில் தன் தாய் தந்தையரின் பாதத்தை கழுவி வணங்கினார். பின்னர், அவர்களுக்குரிய பணி விடைகளை செய்து, அவர்களுக்கு உணவும் பரிமாறி, அவர்கள் உட்கொள்ளும் வரை கூடவே இருந்து அவர்களை நன்கு கவனித்துக் கொண்டார். இவை அனைத்தையும் அறையிலிருந்து கொங்கணவர் கவனித்து வந்தார். வெளியே வந்த கடைக்காரர், இப்போது கேளுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்றார் ? கொங்கணவரோ, ஐயனே, எனக்கு வேண்டியது கிடைத்து விட்டது. நான் வருகிறேன் என்று விடைபெற்றார். அந்த அம்மையார் தன் கணவருக்குரிய பணிவிடைகளை தவறாமல் செவ்வனே செய்தமையால் அவர் கொங்கணவரின் தவ வலிமையை விட அதிக வலிமை பெற்றார். அதே போல், கடைக்காரர், தன் தாய் தந்தையரை எவ்வாறு காக்க வேண்டுமோ, அவ்வாறு காத்தமையால், அவரும் பெரும் வலிமை பெற்றார். ஒருவர் தனக்குரிய பணிகளை செவ்வனே செய்யும் போது, தவ வலிமையை விட அதிக வலிமை பெறுகின்றனர். தவம் என்றால் என்ன என்பதை விளக்க, வள்ளுவர் பெருமானார், ஓர் அதிகாரமே வைத்திருக்கிறார். குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. தவத்திற்கு உரு - தவத்தின் வடிவம் யாது ? தனக்கு வரும் துன்பங்களை உறுதியான மனம் கொண்டு பொறுத்தலும், பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமலுமே தவமாகும். தவத்தை பற்றி திருமந்திரமும் அழகாக விளக்குகிறது. இன்னொரு பதிவில் பார்க்கலாம். சிவசிவ. சைவ நன்னெறிதான் தழைத்தோங்குக. தெய்வ வெண்திருநீறு சிறக்கவே.
-------------------------------
திருச்சிற்றம்பலம். கேள்வி - பதில். 1. தன் வாழ்நாளில் பெரும்பகுதி சமண சமயத்தில் உழன்றுவிட்டோமே என்று திருநாவுக்கரசர் வருந்திய போது, அவர் உடலை தூய்மை படுத்த இரு சிவகணங்கள் வந்து இடபம், சூலம் முத்திரை அவர் கைகளில் பதித்து சென்றது எந்த தலத்தில் ? 2. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பயண களைப்பாக வந்து பசியோடு அமர்ந்த போது, இறைவனே முதியவர் வேடங்கொண்டு பல வீடுகளுக்கு சென்று பிச்சைபாத்திரம் ஏந்தி சுந்தரருக்கு உணவளித்த சென்னைக்கு அருகில் உள்ள தலம் எது ? 3. பெரிய புராணத்தை சேக்கிழார் சுவாமிகள் அரங்கேற்றம் செய்த தலம் எது ? ----------- 1. ஞானசம்பந்த குழந்தை பாடும் போது தாளம் போட்டு கை வலிக்குதே என்று பொற்தாளமும் அளித்து, அதில் ஓசை வராததால், அம்பிகையே ஓசை கொடுத்ததால் ஓசை கொடுத்த நாயகி என்ற பெயரும் பெற்ற திருத்தலம் எது ? 2. அனல் வாதம் புனல் வாதம் செய்து சமணர்களை வென்று சைவத்தை நிலை நாட்டியவர் யார் ? எந்த இருவரின் அழைப்பின் பேரில் அவர் இதைச் செய்தார் ? 3. சிவபெருமானே எழுதிய பதிகம் திருமுறையில் எந்த தொகுப்பில் உள்ளது ?
-----------------
திருச்சிற்றம்பலம். 1. நந்தனாருக்காக நந்தியெம்பெருமானை வளைந்து கொடுக்கச் சொல்லி தரிசனம் கொடுத்த திருத்தலம் எது ? அது எங்கு உள்ளது ? 2. ஏழாம் திருமுறை நூலின் பெயர் என்ன ? இதன் ஆசிரியர் யார் ? 3. பெரியபுராணம் இயற்றியவர் யார் ? இவர் பிறந்த ஊர் எது ? --------------------------- 1. சிவ வேடத்தையே சிவமாக எண்ணி, பல தொண்டுகள் செய்த மன்னன் யார் ? 2. பிரம்மபுரம், வேணுபுரம், சண்பை, புகலி, தோணிபுரம், சிரபுரம் - இவையெல்லாம் என்ன ? 3. சிவன் கோவிலில் சிவபெருமானுக்கு பின்னால் இருக்கும் ஒளிவட்டம் (Aura) எதற்காக உள்ளது ? ------------------------------ 1. பஞ்ச பூத தலங்களில் நீரைக் குறிக்கும் தலம் எது ? 2. தான் பிடிக்கும் மீனில் முதல் மீனை இறைவனுக்கு சமர்ப்பித்த நாயனார் யார் ? அவர் எந்த ஊரில் தொண்டு செய்தார் ? 3.மதுரை ஆதீனத்தை தோற்றுவித்தவர் யார் ? ------------------------------ 1. சித்திரசபை என்பது யாது ? இது எங்குள்ளது ? 2. சிவபெருமானுக்கு மனதிலேயே கோவில் கட்டி குடமுழுக்கு வைத்தவர் யார் ? எந்த ஊரில் ? 3. பஞ்ச பூத தலங்களில் காற்று(வாயு) வைக் குறிக்கும் தலம் எது ? ------------------------------ முக்தி என்றால் என்ன ? அது எத்தனை வகைப்படும் ? பசுவாகிய உயிர்கள் தம் செய்வினைகளுக்கேற்ப மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மை உடையது என்பதை பார்த்தோம். இதுவே பிறவிச்சுழல் ஆகும். இந்த பிறவிச்சுழலில் இருந்து விடுபட்டு மீண்டும் பிறவாமல் இறைவனுடைய உலகை அடைவதே முக்தி ஆகும். சரி. இறைவன் உலகிற்கு சென்று அங்கு நாம் என்ன செய்வோம், செய்ய முடியும் ? இறைவன் உலகிற்கு அதாவது, சிவ உலகிற்கு சென்று, அங்குள்ள பணிகளையும் தொண்டுகளையும் செய்து வரலாம். இறைவனுக்கு அருகே இருந்து அவனுக்குரிய அணுக்கத் தொண்டு செய்து வரலாம். இறைச் சின்னங்களைப் பெற்று, இறைவனுக்கு பயன்படும் வகையில் ஏதாவது ஒரு உருவமாகி அவனுக்கு தொண்டு செய்து வரலாம். (உதாரணமாக, சங்கு, சக்கரம், வேல்). இந்த கருவிகள் எதுவுமே வேண்டாம் என்று இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கலாம். இவையே நாம் செய்யக்கூடியவை. சிவ உலகிற்கு சென்று தொண்டு செய்வது, சிலலோகத்தில் இருத்தல். வடமொழியில், சாலோகம் எனப்படும். இறைவனுக்கு அருகே இருந்து அணுக்கத் தொண்டு புரிவது, இறைவனருகே இருத்தல், சாமீபம் எனப்படும். இறைவனின் சின்னத்தையும் உருவத்தையும் பெற்று தொண்டு செய்வது இறைவனோடு ஒத்த நிலையடைதல், சாரூபம். இறைவனோடு கலந்து நிற்றல் சாயுச்சியம் ஆகும். முக்தி அடைந்த ஆன்மாக்கள் சுத்த சத்வமயமான தெய்வ உடல் கிடைக்கப்பெறும். அது அழியாத தன்மை கொண்டது. இறைவன் திருவுள்ளம் கொண்டால், முக்தி அடைந்த ஆன்மாக்களை உலக நன்மைக்காக மீண்டும் பூமியில் அவதரிக்க செய்தருளுவார். உதாரணமாக சுந்தரமூர்த்தி நாயனார். இதைத் திருமந்திரம்: பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் பாசம் அருளான தாகும்இச் சாமீபம் பாசம் சிவமான தாகும்இச் சாரூபம் பாசங் கரைபதி சாயுச் சியமே. பொழிப்புரை : சாலோகம், மாயா கருவிகள், தாமே உயிர் என்று உயிரை மருட்டி அதனைத் தம் வயப்படுத்தியிருந்த நிலை நீங்கித் தாம் அதனின் வேறாய சடங்களாதலைத்தோற்றி, அதன்வயப்பட்ட நிலையை உடையது. சாமீபம், அக்கருவிகள் அருள்வயப்பட்டதாய் உயிர் இறைவனை அணுகுதற்குத்துணை செய்து நிற்கும் நிலையை உடையது. சாரூபம், அக்கருவிகள் சிவமயமாய் உயிருக்குச் சிவானந்தத்தைத் தரும் நிலையை உடையது. சாயுச்சம், அக்கருவிகள் யாவும் கழிய, உயிர் தான் நேரே சிவனைக் கூடியிருக்கும் நிலையை உடையது. நமசிவாய. சைவ நன்நெறிதான் தழைத்தோங்குக. தெய்வ வெண்திருநீறு சிறக்கவே. --------------------------- திருச்சிற்றம்பலம். பெண்களின் கவனத்திற்கு.... எந்த ஒரு செயலையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்யும் போது, அந்த செயல் மிகச் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய "நாகரீக" உலகத்தில் இது இயற்கையாக அமையாததே, பல்வேறு மனஉளைச்சலுக்கும் உடல் நலம் குன்றுவதற்கும் காரணமாக உள்ளது என்பதை அறிவோம். அந்தக் காலத்தில், ஒவ்வொரு வேலையையும் செய்யும் போதே, மகிழ்வோடு ஆடி பாடி செய்வர். இவ்வாறு உருவான பாடல்களை நாம் நாட்டுபுற பாடல்கள் என்று நாம் அறிவோம். கும்மிப்பாட்டு, கோலாட்டம் போன்ற ஒரு சில ஆட்டங்களும் பாடல்களுமே இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைக்கு தெரியும். வரும், வளரும் தலைமுறைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், அதோடு அவர்களின் நலத்தையும் பேணும் வித்தைகளையும் கற்பிப்பது நம் தலையாய கடமையாகும். இவ்வாறாக அந்த காலத்தில் நடைபெற்ற வேலைகளின் போது பாடும் பாடல்களும், விளையாட்டுக்களின் போது பாடும் பாடல்களும் நம் மாணிக்கவாசகரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த பாடல்களை சிவபெருமானுக்கு பாடும் பாடல்களாக தனது திருவாசகத்தில் அமைத்திருப்பதில், மாணிக்கவாசகர் பெரும் புரட்சி செய்துள்ளார். இந்த பாடல்கள் மிக எளிதாக கேட்பவர் மனதில் பதிவது மட்டுமின்றி, உடனடியாக மனனமும் ஆகி விடும். இவை மிகுவும் சந்த நயமும், இசையும் கூடி இனிமையாக இருக்கிறது. இன்றைய பெண்களாகிய நீங்கள், இந்த பாடல்களை சற்றே ஆய்ந்து, அந்த காலத்தில் நடந்தது போன்றே, இன்று நம் இளைய தலைமுறை கொண்டு பயிற்சி செய்து, மேடைகளில் இசையப் பெற்றால், பன்மடங்கு மகிழ்ச்சியை நம் அனைவருக்கும் இது தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆகவே.. நீங்கள் செய்ய வேண்டியது..... இந்த பாடல்கள் நம் விழா மேடைகளில் ஒலிக்க வேண்டும். உதாரணமாக சில பாடல்களை இங்கு தருகிறேன். முழு ஆராய்வையும் நீங்கள் செய்யுங்கள். பொற்சுண்ணம் - திருவிழாக்களின் போது மக்கள் உடலின் மீது தூவப்படும் நறுமணச் சுண்ணம். அலங்காரமாக உடலில் அப்பிக் கொள்ளும் ஓர் பொருள். இந்த பொருளை இடித்து உருவாக்குவர். அவ்வாறு பெண்களாக இடிக்கும் போது பாடும் பாடல் திருப்பொற்சுண்ணம். சுண்ணம் இடித்துக்கொண்டு சிவபெருமானையும் பாடினால் அது திருவாசகம். மற்றபிற பாடல்கள்: திருக்கோத்தும்பி - தும்பியை சென்று கூறுமாறு சொல்லுதல் திருச்சாழல் - சாடுதல் என்ற கேள்வி-பதில் விளையாட்டு திருத்தெள்ளேணம் - கைகொட்டி பாடியாடும் மகளிர் விளையாட்டு திருப்பூவல்லி - பூ பறிக்கும் போது பாடுவது திருவுந்தியார் - உந்தி பற - இரு பெண்கள் கைகோர்த்து சுற்றும் விளையாட்டு திருத்தோள் நோக்கம் - தோழியர் ஒருவர் தோளை பார்த்து பாடிவிளையாடுவது. திருப்பொன்னூசல் - ஊஞ்சல் ஆடும் போது பாடுவது. சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக. தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே. திருச்சிற்றம்பலம். ----------------------- |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக