முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

உங்கள் சமய நூல்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா ?

திருச்சிற்றம்பலம்.

உங்கள் சமய நூல்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா ?

சைவ சமய நூல்கள் தொகுப்பு.


எந்த ஒரு கிறிஸ்தவனைக் கேட்டால், பைபிள் தான் எங்கள் நூல், புனிதமான நூல் என்பான். ஒரு முசுலீமைக் கேட்டால் குரான் என்பான். நம் நூல்கள் எவை என்று தெரியாமலேயே கண்ட கண்ட புத்தகங்களை படித்து நான் அந்த மதத்திற்கு மாறிவிட்டேன் என்று ஊடகங்களில் பெருமை பேசிக்கொள்ளும் சிறுமையர்களை நாம் இன்றைய தினங்களில் பார்த்து வருகிறோம். அவர்கள் நூல்களில் இல்லாத கொடூரங்கள் இல்லை. நிறைய நேரங்களில் இந்த நூல்கள் எல்லாம் தீவிரவாதிகளுக்கான பயிற்சி நூல்கள் போல் இருக்கின்றன. சமுதாயங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை உடையவனாக இருக்கின்றன. பழங்கால மனிதர்களால் எழுதப்பட்ட  இந்த புத்தகங்கள் பல முறைகள் மனிதர்களால் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதப்பட்டன. உதாரணத்திற்கு பழைய ஏற்பாட்டில் தேவையில்லாத கசடுகள் இருப்பதை நீக்கி புதிய ஏற்பாடு எழுதப்பட்டது. இந்த புத்தகங்கள் யாவும் பெரும் பகுதி அந்தந்த காலத்திற்கு மட்டுமே உகந்ததாக இருக்கிறது. ஒரு சில அமெரிக்கர்கள் பைபிளில் இருக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசு கொலை, நரபலி போன்ற அனைத்தையும் தொகுத்தே வெளியிட்டுள்ளனர். http://www.evilbible.com இந்த தொகுப்பை கொண்டுள்ளது. இதனாலேயே இவர்கள் எத்தனை கொலை செய்தாவது தம் மதத்தை பரப்ப வேண்டும் என்ற எண்ணங்கொண்டு, அவர் நேசிக்கிறார் போன்ற பொய் வாசகங்களைக் கூறியும் பிற சமயங்களின் கடவுளர்களை சாத்தான் என்று கூறியும், கடந்த 17 நூற்றாண்டுகளாக உலகில் போராடி வருகிறார்கள். உலக வரலாற்றிலேயே அதிக உயிர்களை ஒரு காரணத்திற்காக கொன்றது எந்த காரணத்திற்கு என்றால் இவர்களின் மதத்தை உலகில் பரப்புவதற்காகத்தான். இத்தனை "பெருமை"யுடைய மதத்தை வைத்துக் கொண்டு நம் ஊர் தெருக்களில் புதியதாக மதம்மாறியவர்கள் எத்தனை ஒலி பெருக்கிகள் வைத்துக் கொண்டு எத்தனை ஆட்டம் போடுகிறார்கள் ? நிற்க.


நம் சமயத்தைப் பற்றிய அடிப்படை அறிவு/கல்வி இல்லாமையினாலேயே நமக்கு இந்த இழி நிலை. அதனால் தான் உரக்க கூறுகிறேன், கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன். சமயகல்வி இல்லாதவன் உயிர் இல்லாதவன். நம் சமயங்களின் நூல்கள் எவை என்று நாம் அறிந்து கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக படித்து ஞானத்தைப் பெறுவது நாம் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களில் ஒன்று. நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப் பட்டவை. இவை எவற்றிலும் கீழ்த்தரமான வார்த்தைகள் ஒன்று கூட கிடையாது. யாரையும் அழிக்கச் சொல்லும் தீமையான வார்த்தைகளோ, வாக்கியங்களோ ஒன்று கூட கிடையாது. இவை எக்காலத்தையும் சாராமல், காலத்தை வென்றவை. அதாவது எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மையை கொண்டவை. இனி வரும் ஆயிரமாயிரம் காலத்திற்கும் இது பொருந்தும். இது போன்று எந்த சமயங்களிலும் கிடையாது. இது இறைவனின் திருவருள் ஒன்றினாலேயே கூடும். அப்படிப்பட்ட பெருமையுடைய, என்றைக்கும் பொருந்தக்கூடிய, இதுவரை ஒரு சிறு எழுத்து கூட மாற்றாமல் அப்படியே இன்றைக்கும் பொருந்துவதாக அமைந்த நூல்கள் அத்தனையும் படிக்க நாம் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் ? அந்த நூல்கள் எவை என்று அறிந்து கொண்டு அவற்றை படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.



அநாதியானதும், அநாதியான முதல் நூல்களை உடையதும் எனக்

 

 கொள்ளப்படும் சைவ சமயத்தின் பிரமாண நூல்கள்



திருநெறி

  • வேதம் 4 – அருநெறிய மறை: உலகிற்கு வேண்டிய பொது அறம் சொல்வது
  • சிவ ஆகமம் 28 – பெருநெறி: சத்திநிபாதத்திற்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது

திருமுறை சார்ந்த நூல்கள்

பன்னிரு திருமுறை 12 - தோத்திரம்
திருக்கடைக்காப்பு (திருமுறை 1,2,3 திருஞானசம்பந்தர்)
  • தேவாரம் (திருமுறை 4,5,6, திருநாவுக்கரசர்)
  • திருப்பாட்டு (திருமுறை 7, சுந்தரர்)
  • திருவாசகம், திருக்கோவையார் (திருமுறை 8, மாணிக்கவாசகர்)
  • திருவிசைப்பா, திருப்பல்லாண்டு (திருமுறை 9, 9 ஆசிரியர்கள்)
  • திருமந்திரம் (திருமுறை10, திருமூலர்) பிரபந்தம் (திருமுறை 11, 12 ஆசிரியர்கள்)
  • பெரியபுராணம் (திருமுறை 12, சேக்கிழார்)
  • திருத்தொண்டர் புராணசாரம்
  • திருப்பதிக்கோவை
  • திருப்பதிகக்கோவை
  • திருமுறை கண்டபுராணம்
  • சேக்கிழார் புராணம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை

சைவ சமய சாத்திர நூல்கள்

  1. திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
  2. திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
  3. சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்
  4. சிவஞான சித்தியார் - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
  5. இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்
  6. உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
  7. சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்
  8. திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்
  9. வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்
  10. போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்
  11. உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
  12. கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்
  13. நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
  14. சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்

புராண நூல்கள்

  • திருவிளையாடற் புராணம்
  • மதுரைக் கலம்பகம்
  • மதுரைக் கோவை
  • மதுரை மாலை
  • காஞ்சிப் புராணம்
  • கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
  • கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
  • சிதம்பர மும்மணிக் கோவை
  • திருவாரூர் நான்மணி மாலை
  • சிதம்பர செய்யுட் கோவை
  • காசிக் கலம்பகம்
  • திருக்குற்றாலக் குறவஞ்சி
  • பிரபந்தத்திரட்டு
  • இரட்டைமணி மாலை
  • கந்த புராணம்
  • பிற நூல்கள்
  • சித்தாந்த சாத்திரம்
  • சொக்கநாத வெண்பா
  • சொக்கநாத கலித்துறை
  • சிவபோக சாரம்
  • முத்தி நிச்சயம்
  • சோடசகலாப் பிராத சட்கம்
  • திருப்புகழ்
  • முத்துத்தாண்டவர் பாடல்கள்
  • நீலகண்டசிவன் பாடல்கள்
  • நடராசபத்து

வீரசைவ நூல்கள்

  • சித்தாந்த சிகாமணி
  • பிரபுலிங்க லீலை
  • ஏசு மத நிராகரணம்
  • இட்டலிங்க அபிடேகமாலை
  • கைத்தல மாலை
  • குறுங்கழி நெடில்
  • நெடுங்கழி நெடில்
  • நிரஞ்சன மாலை
  • பழமலை அந்தாதி
  • பிக்ஷாடன நவமணி மாலை
  • சிவநாம மகிமை
  • வேதாந்த சூடாமணி
  • திருத்தொண்டர்மாலை
  • ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்

ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பட்டினத்தார், தாயுமானார், சிவப்பிரகாசர், குமரகுருபரர், சைவத் திருமடத்து தலைவர்கள், அருளாளர்கள், ஔவையார், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர், கிருஷ்ணபாரதி, சுத்தானந்த பாரதி, 18 சித்தர்கள் ஆகியோரது நூல்கள்

இன்னும் எண்ணற்ற நூல்களும் உள.

இணைத்துள்ள படங்களை B4 தாளில் அச்சிட்டு உங்கள் கோவில்களில் ஒட்டி வையுங்கள். இதுவும் ஒரு சிவதொண்டே. நமசிவாய.

அச்சிட ஏதுவான கருப்பு வெள்ளைப்படம்.


வண்ணப்படம்.





1 கருத்து:

  1. அய்யா! தங்களிடம் நமசிவாய கவிராயர் எழுதிய " உலகாம்மை அந்தாதி" மற்றும் " சிலேடை கவி" புத்தகம் உள்ளதா? நன்றி.

    பதிலளிநீக்கு