முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது யாது ? jesus loves you... யாரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை

whatsapp shiva siva shaiva articles வாட்ஸேப் வாட்சப் சிவ சைவ செய்திகள்
     
திருச்சிற்றம்பலம்.
     

சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது யாது ?

 

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.
         
2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.
           
3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
            
4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.
          
5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.
            
6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.
       
7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.
      
8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.
   
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
   
திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.
    
திருச்சிற்றம்பலம்.
        

அளவிடமுடியாத பெருஞ்சுடர்.

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு ? இதை நாம் தூரத்தை அளவிடும் அளவு கோலால் அளந்து விட முடியும். இத்தனை தூரத்தை நாம் ஒரு கிலோமீட்டர் என்று நாமே வைத்துக் கொண்டு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இத்தனை கிலோமீட்டர்கள் என்று அளவிட்டு கூற முடியும். வெப்பத்தை அளவிட முடியும். இந்த மூட்டை எத்தனை கிலோ என்று அளவிட முடியும். இந்த பாக்டீரியா எத்தனை பெரியது என்று அளவிட முடியும். இவ்வாறு நாம் பார்த்து உணரும் பொருட்களை அளவிட நாமே ஒவ்வொரு அளவு கோலை வரையறுத்துள்ளோம்.
ஆனால், நாம் வரையறுத்துள்ள அத்தனை அளவு கோல்கள் எதிலுமே அகப்படாத பொருள் ஒன்று உள்ளதே. அதன் நீளத்தை அளந்தால் முடியவில்லை. அகலத்தை அளந்தால் முடியவில்லை. இவ்வாறு நாம் அறிந்த அளவுகோல்கள் எதை வைத்துமே நம்மால் அளவிடமுடியாத பொருளாக இது உள்ளது. உண்மையில் கூறப் போனால், இதை அளவிடும் அளவுகோல் நம்மிடம் இல்லை. எந்த அளவு கோலை வைத்து அளவிடுவது என்றே நமக்குத் தெரியவில்லை. தெரியாத ஒன்றை நாம் அளவிட முடியாது. இவ்வாறாக நம்மால் அளவிடமுடியாத பொருளாக அந்த பரம்பொருளே இருக்கிறது. இதையே சைவ சித்தாந்தம், சிற்றறிவை வைத்து பேரறிவை அளவிட முடியாது என்கிறது. அந்த முற்றறிவை நம்மால் அறிய முடியாது. அதை வணங்கி ஏத்தி நிற்பதே நாம் செய்ய தகுந்த செயல்.

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
                        - திருமந்திரம்

பொழிப்புரை:

எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணர வல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.

திருமுறை அறிவோம். திருமுறை அறிவிப்போம்.

திருச்சிற்றம்பலம்.

நான் சிவத்தை அணுகுகின்றேனா ?

 

இறைவனைப் பற்றி அறியாதிருந்த காலத்தே, நாம் எங்கோ காடு மேடு புதர்கள் என்று அலைந்து திரிந்து சுற்றினோம். ஆனால், இறைவனைப் பற்றி அறிய ஆரம்பித்து அவனை வழிபட ஆரம்பித்த பின்னர், அந்த சிவத்திற்கும் நமக்கும் உள்ள இடைவெளி குறைந்து வருகிறதா ? அந்த சிவத்தை நாம் நெருங்குகிறோமா ? இதை அறிய முடியுமா ? இதற்கு அளவுகோல் உள்ளதா ?
இருக்கிறது. இறைவனை அறிந்த பின்னர், நீங்கள் அவன் மீது அன்பு செலுத்துவீர்கள். அவனை உள்ளம் என்ற கோவிலில் வைத்து பூஜிப்பீர்கள். ஆராதனை செய்வீர்கள். அதே அன்பானது அவனை அண்டி வாழும் அனைத்து உயிர்களின் மீதும் உங்களுக்கு அதே அன்பு ஏற்படும். அந்த உயிர்கள் மீதும் உங்களுக்கு அன்பு ஏற்பட்டால், புலால் உண்ணுபவராக இருந்தால் நீங்கள் அதை நிறுத்தி விடுவீர்கள். பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தை தனக்கு வரும் துன்பமாக பாவனை செய்வீர்கள். நடக்கும் போது கூட எறும்புகளைக் கொன்று விடுவோமோ என்று கவனமாக நடப்பீர்கள். எந்த ஒரு உயிரையும் கொல்ல மாட்டீர்கள். முல்லைக் கொடி படர கொம்பு இல்லாமல் தவித்த தவிப்பை நீங்கள் உணர்வீர்கள். கன்றை இழந்த தாய்ப்பசுவின் வேதனையை உணர்ந்து துடித்த மனுநீதிச் சோழனின் மன வேதனையை நீங்களும் உணர்வீர்கள். இறைவனின் கண்களில் இருந்து ரத்தம் வழிந்த காட்சியைப் பார்த்துத் துடித்த திண்ணனாரின் மனநிலையை நீங்களும் உணர்ந்து துடிப்பீர்கள்.
இந்த மாற்றங்கள் உங்களுக்குள்ளும் நிகழ்ந்தால், நீங்கள் சிவத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
ஈசனவர் எவ்வுயிர்க்கும் இயல்பானன் சாழலோ.
திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

jesus loves you

 

சென்ற ஞாயிறு காலை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு காற்றழுத்தம் சரி பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது, என் நெற்றி நிறைய திருநீறு இருப்பதைப் பார்த்தவுடன் ஒரு புன்னகையோடு பெரும் ஊக்கத்துடன் ஒரு பெண்மணி என்னை நோக்கி ஓடோடி வந்து ஒரு துண்டு சீட்டை நீட்டினாள். என்னைப் பார்த்து இயேசு உங்களை நேசிக்கிறார் என்று கூறி என் பதிலுக்காக என் முகத்தை நோக்கினாள்.

நான் பதிலுக்கு புன்முறுவலிட்டுக் கொண்டே இந்த 5 கேள்விகளைக் கேட்டேன்.

1. உலகிலேயே எந்த ஒரு காரணத்திற்காக அதிகப்படியான மனிதர்களையும், கால்நடை உயிரினங்களையும் கொன்று குவித்துள்ளார்கள் என்று தெரியுமா ? இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்தவ மதத்தை உலகெங்கும் பரப்புவதற்கு. இங்கு நேசம் எங்கிருந்து வந்தது ?

2. ஐரோப்பா கண்டத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஆசியாவைத் தவிர கிறிஸ்தவ மதத்தை எல்லோரும் கைவிட்டு தூக்கியெறிந்து வருகிறார்கள் தெரியுமா ? அமெரிக்காவில் மட்டும் கடந்த 2007-2014 ஏழாண்டுகளில் கிறிஸ்தவத்தை தூக்கியெறிந்தவர்கள் மட்டும் 50 இலட்சம் பேர் தெரியுமா (New York Times) ?

(http://www.nytimes.com/2015/05/12/upshot/big-drop-in-share-of-americans-calling-themselves-christian.html?_r=0
)
உலகம் முழுவதும் அழிந்து வரும் கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்ற, அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, இந்தியாவை குறிவைத்து தெருவுக்கு தெரு கடை போட்டிருப்பது தெரியுமா ?

3. வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் கூறும் எந்த பெயரும் இந்த உலகில் இல்லை என்று தெரியுமா ? அப்போது மக்கள் ஆனந்தமாக வாழ்ந்து வந்தது தெரியுமா ?
   
4.இயேசு சிலுவையில் அறையப்பட்டு சாவதற்க்கு முன்னர் என்ன கூறினார் தெரியுமா ?

Matthew 27:45  மேத்யு அதிகாரம் 27:45

     The Death of Jesus

     45 From noon until three in the afternoon darkness came over all the land. 46 About three in the afternoon Jesus cried out in a loud voice, “Eli, Eli,[a] lema sabachthani?” (which means “My God, my God, why have you forsaken me?”).[b]
 Eli Eli lema sabachthani - இறைவா இறைவா என்னை இப்படி கைவிட்டுவிட்டாயே ?

என்று கதறினார். இறைவனால் கைவிடப்பட்டவர் இயேசு. அப்படி கைவிடப்பட்டவரை இறைவனின் மகன் என்று எண்ணி ஒரு மதத்தையே உருவாக்கியுள்ளனர் வெளிநாட்டினர். இயேசு இறைவனின் மகனா ? பைபிளில் எழுதப்பட்டது யாவும் உண்மையா ? பைபிளில் எத்தனை கேவலமான வசனங்கள் இருப்பது தெரியுமா ? நம் நூல்கள் யாவும் இறைவனாலேயே அருளப்பெற்று காலத்தை வென்றவை தெரியுமா ?

5. நம் பரம்பு நாட்டை ஆண்ட பாரி மன்னன், மலைவளம் காணச் சென்ற போது, முல்லைக் கொடி ஒன்று படருவதற்கு கம்பு இல்லாமல் காற்றில் இங்கும் அங்கும் தவிப்பதைப் பார்த்த அந்த மன்னனின் கண்களில் கண்ணீர் பெருகி, தன் தேரை அங்கேயே அந்த முல்லைக் கொடிக்கு விட்டுவிட்டு நடந்தே அரண்மனை போனது தெரியுமா ? எல்லா உயிர்களிடத்தும் நாம் மிக்க அன்பு வைத்திருந்தது தெரியுமா ? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வள்ளலார் வாடியது தெரியுமா ? அன்பைப் பற்றி யார், யாருக்கு உபதேசம் செய்வது ?
இந்த நான்கு கேள்விகள் மட்டும் அவளைக் கேட்டுவிட்டு அவள் கொடுத்த துண்டுச்சீட்டை கிழித்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் பின்னாலிருந்து அவளுடன் கூட வந்தவர்கள் அவளை அழைக்க, அவள் வேறு ஏதும் என்னிடம் பேசாமல் சென்று விட்டாள்.
           
joshua project என்ற திட்டத்தை அமெரிக்க வாழ் கிறிஸ்தவர்கள் உருவாக்கி அதற்கு கோடி கோடியாக பணத்தை கொட்டி ஆசியாவிலிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இயேசு அழைக்கிறார் என்று கூறுமாறு ஏவிவிட்டிருக்கிறார்கள். நான் சிங்கப்பூரில் வாழும் காலத்தும் என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. நான் அமெரிக்காவில் வாழும் போதும், என் வீட்டு கதவுகள் தட்டப்பட்டன. நான் லண்டனில் வாழ்ந்த போதும் என் வீட்டு கதவுகள் தட்டப்பட்டன. நம் எல்லோர் வீட்டுக்கதவும் ஒரு நாள் தட்டப்படும். அப்போது நாம் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

Following statement of the scholar Sir John Marshall acknowledges the view:
        Among the many revelations that Mohenjadaro and Harappa have in store for us, none perhaps is more remarkable than this discovery that Saivism has a history going back to the chalcolithic age or perhaps even further still, and that it takes place on the most ancient living faith in the world.
   Another Western scholar G.U. Pope in his work Thiruvasagam writes as follows:
   Saivism is the oldest prehistorian religion of South India, essentially existing from pre-Aryan times.
   Of the four Dravidian languages spoken now, Tamil is the oldest and richest language. The term Dravidian can, therefore, without any hesitation, be taken to mean Tamilnadu of South India.



1 கருத்து:

  1. அருமை.'ஆண்டவரே, என்னைக் கைவிட்டுவிட்டார் கதறிய ஏசு எவ்வாறு கடவுள்தான்? 100% foolproof argument.சிவசிவ!

    பதிலளிநீக்கு